சென்னை, ஆக.16- உடுமலை சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதற்கு உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறை யீடு செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கௌசல்யா தம்பதியினருக்கு, கௌசல்யா பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ள நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி கவுசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாப மாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர்தப்பி னார். இதுதொடர்பான வழக்கை விசா ரித்த திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யா வின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப் பட்டனர்.
இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யா வின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோ தரர் விக்னேஸ்வரன் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகை யில் தமிழக அரசு இதுவரை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வில்லை. இதனால் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதோடு, மேலும் இது போன்ற குற்றநிகழ்வுகளுக்கு ஊக்க மளிப்பதாக அமைந்துவிடும். எனவே, தமிழக அரசு தாமதமில்லா மல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்வதுடன், உரியவாதங்களை எடுத்து வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.