சென்னை, மார்ச் 11- உலகம் முழுவதும் பரவும் புதுமையான கொரோனா வைரஸ் பயங்கரமான தொற்று நோய்களில் ஒன்றாகும். கொரோனா வைர ஸின் அறிகுறிகள் பொதுவாக இன்ஃபுளு யன்சாவுடன் தொடர்புடையவை. காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் கடும் சோர்வு போன்ற அறிகுறிகள், கொரோனா வைரஸை விட இன்ஃபுளுயன்சாவை குறிப்பதாக இருக்கும் என்று வல்லுனர்கள் குறிப்பிடு கின்றனர். கொரோனா வைரஸ் மற்றும் ஃபுளு காய்ச்சல் சில நேரங்களில் உயிரிழப்புகளை யும் ஏற்படுத்தி விடுகிறது. தற்போது உல கெங்கும் பரவி வருகின்ற கோவிட்-19 காரண மாக, செய்யப்படும் பரிசோதனைகள், இன்ஃபுளுயன்சா பாதிப்பின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது, இன்ஃபுளுயன்சா வராமல் இருப்ப தற்கான தடுப்பூசி மருந்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட பருவகால நோயாக ஃபுளு இருக்கின்ற நிலையில், இந்தியா போன்ற வெப்பமண்டல பகுதியிலுள்ள நாடுகளில், ஆண்டு முழுவதும் இன்ஃபுளுயன்சா ஏற்படு வதற்கான இடர் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் இன்ஃபுளுயன்சா ஐந்து மடங்கு அதிகரித்தி ருப்பதாக நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையம் மதிப்பீடு செய்துள்ளது. இன்ஃபுளு யன்சாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் 405 ஆக இருந்தது. கடந்தாண்டில் 1072 ஆக அதிகரித்தி ருக்கிறது. இது இந்த நோய் அதிகரித்து வரு வதை காட்டுவதாக அப்பல்லோ மருத்துவ மனைகளின் தொற்றுநோய் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் . வி. ராமசுப்பிரமணியன் கூறினார். தடுப்பூசியால் இதனை கட்டுப்படுத்தமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.