செங்கல்பட்டு, டிச. 6- வண்டலூர் ஊராட்சியில் போடப்பட்ட தார்ச்சாலை ஆறே மாதத்தில் பழுத டைந்துள்ளது. இச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சி சென்னைக்கு மிக அருகில் அமைந்தி ருப்பதால் வேகமாக வளர்ந்து வரும் பகுதி யாக உள்ளது. இந்நிலையில் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படாததால் பயன் படுத்த முடி யாத நிலையில் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மூகாம்பிகை நகர்ப் பகுதியில் வண்டலூரி லிருந்து பெருங்களத்தூர் செல்லும் இந்த சாலையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்க ளில் சென்னைக்கு செல்லும் பலரும் நெரிச லில் சிக்காமல் இருக்க கார், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் வரை சிமெண்ட் சாலையாக இருந்ததை மாற்றி தார்ச் சாலையாக அமைத்துள்ளனர். தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்ட தால் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் பழுதாகிச் சேதமடைந்துள் ளது. மேலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் என அனைவரும் நாள்தோறும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாண்டுரங்கனிடம் கேட்டபோது வண்டலூரிலிருந்து பெருங்களத்தூர் செல்லும் இந்த சாலையை வண்டலூர் மக்கள் மட்டுமின்றி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் முதல் பெருங் களத்தூர் வரை ஏற்படும் போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்க பலர் பயன்படுத்தி வரு கின்றனர். தினந்தோறும் ஐம்பதுக்கும் மேற் பட்ட பள்ளி வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றது. சாலை கடந்த ஆறு மாதங்க ளுக்கு முன்னர் செப்பனிடப்பட்டது. ஆனால் தரமற்ற முறையில் சாலையை அமைத்து விட்டுப் பல லட்சங்களை கையாடல் செய் துள்ளதாக பொதுமக்கள் பேசிக்கொள்கி றார்கள். இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலை முற்றிலும் பயன்ப டுத்த முடியாத நிலையில் பழுதடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். சாலையை மீண்டும் செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இந்த சாலையில் வண்டலூர் மலைப் பகுதியிலிருந்து மழை நீர் ஏரிக்குச் செல்லும் சிறு பாலங்கள் பழுதடைந்துள்ள தால் தண்ணீர் சாலையில் தேங்குகின்றன. சாலையைச் செப்பனிடுவதுடன் சிறு பாலங் களையும் செப்பனிட வேண்டும் அதற்கான உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும் என்றார்.