அம்பத்தூர், ஆக. 12- ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலக கட்டடம் இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆவடியில் கடந்த 35 ஆண்டுகள் பழமையான நகராட்சி அலுவலக கட்ட டத்தில் காவல் துறை மாவட்ட துணை ஆணையர் அலுவலகம், நகர நில அளவையர் பிரிவு அலுவல கம், போக்குவரத்து காவல் பிரிவு அலுவலகம், அம்மா உணவகம் ஆகியவை செயல்படுகின்றன. தற்போது இந்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதி கள் உடைந்து சேதமடைந்து ள்ளன. இதையடுத்து, ரூ. 10.5 கோடியில் ஆவடி நகராட்சி அலுவலகம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அங்குதான் தற்போது ஆவடி மாநகராட்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், மற்ற 4 அரசு அலுவலகங்களும் இன்றுவரை அந்த பழைய நகராட்சி கட்டட வளாகத்தி லேயே செயல்பட்டு வருகின்றன. அந்த கட்டடம் முறை யான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைத்து இடியும் நிலையில் உள்ளது. அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவல கத்திற்கு நாள்தோறும் பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பழைய நகராட்சி கட்டடத்தின் மேற்கூரைகள் மற்றும் பக்கச்சுவர்களில் விரிசல்கள் அதிகரித்து உடை யும் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தில் ஏற்படும் நீர்க்கசிவால் அரசு அலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்கள் சேதமடைகின்றன. அரசு கட்டடத்தை இடித்து, அங்கு புதிய கட்டடம் கட்டு வதற்கு ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கட்டடம் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.