சென்னை, செப்.5- தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து பாஜக வேட்பாளராக அங்கு போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு எம்.பி. கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராள மான குறைபாடுகள் இருந்ததாகவும், அவை தொடர் பாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட போது தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் தமி ழிசை சவுந்தரராஜன் மனுவில் தெரிவித்துள்ளார். தனது கணவரும், மகனும் சிங்கப்பூர் குடி மகன்கள் என்பதால் அவர்களது வருமான வரி தொடர்பான விவரங்கள் பொருந்தாது என்று வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளதாக தமிழிசை தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கணவர் மற்றும் மகனின் குடிமக்கள் பதிவுச் சான்றையும் கனிமொழி இணைக்காததால் அவரது வேட்புமனு குறைபாடானது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு கனிமொழி 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து பதி லளிக்கும்படி திமுக எம்பி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம் பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.