tamilnadu

img

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மொத்தம் 124 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று இதுவரை இல்லாத வகையில்  ஒரேநாளில் தமிழகத்தில் 110 பேருக்கு கெரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. 
77300 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். தற்போது கண்டறியப்படுள்ளது 110பேரும் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லிமாநாட்டிற்கு சென்று  திரும்பிய 190 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தில்லி மாநாட்டில் இருந்து திரும்பிய 515 பேர் அரசிடம்  தாங்களாக தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி உள்ளார்.தில்லி மாநாட்டில் பங்கேற்ற 1103 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர் என்று பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இதுவரை 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது. 34
(தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக)
கோவை-28 
நெல்லை-6
ஈரோடு-2
தேனி-20
திண்டுக்கல்-17
மதுரை-9
திருப்பத்தூர்-7 
செங்கை-7
சிவகங்கை-5
தூத்துக்குடி-2
சென்னை-1
கரூர்-1
காஞ்சி-2 
திருவண்ணாமலை-2 

தமிழகத்திலேயே கொரோனாவால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட மாவட்டம் கோவை . இதுவரை மொத்தம் 34 பேர் பாதிக்கப்பட்டு  கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.