tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

கிண்டி மகளிர் ஐடிஐயில்  ஜூலை 15 வரை நேரடி சேர்க்கை

சென்னை, ஜூலை 4 - கிண்டி மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை ஜூலை 15ந் தேதி வரை நடைபெறுகிறது. 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கையானது (ஸ்பாட் அட்மிஷன்) ஜூலை 1ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

10ஆம் வகுப்பு தேறியவர்கள், தோல்வியுற்றவர்கள்,இடை நின்றவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு தேறியவர்கள், தோல்வியுற்றவர்கள் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சியின் போது அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், 2 செட் தையல் கூலியுடன் சீருடை, காலணி, இலவச பேருந்து மற்றும் ரயில் பயணச் சலுகை, மாதாந்திர உதவித் தொகை 750 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9094339616, 8668031248 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று பயிற்சி நிலையத்தின் முதல்வர் என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகள் உடந்தை

சென்னை, ஜூலை 4- சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது.

இதற்கு சென்னை விமான நிலை யத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்த லில் தொடர்பில் இருந்துள்ளார்.

அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூலை 4- சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தி னர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.