சென்னை, நவ. 14 கப்பல்களுக்கு வழங்கும் எரிபொருள் உலகத்தரத்தில் 2020ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப இந்தியன் ஆயில், இந்திய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு சுற்றுச்சூழல் விதிக்குட்பட்ட எரிபொருள் தயாரித்து சப்ளை செய்து தரத் துவங்கியுள்ளது. கந்தகம் இல்லாத கப்பல் எரிபொருள் கண்ட்லா துறைமுகத்துக்கு வந்த ‘பெர்லின்’ டேங்கர் கப்பலுக்கு இந்தியன் ஆயில் சப்ளையை துவக்கியது. இந்த எரிபொருள் கண்ட்லா, கொச்சி துறைமுகங்களில் உடனடியாக கப்பல்களுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னை, தூத்துக்குடி, மும்பை, மங்களூர், விசாகப்பட்டினம், பாரதீப், ஹல்தியா துறைமுகங்களில் கப்பல்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட எரிபொருள் இம்மாத கடைசியில் வழங்குவது துவங்கும்.இந்தியன் ஆயில் கப்பல்களுக்கு 2 ரக சுற்றுச்சூழல் எரிபொருள் தயாரிக்கிறது. மசகு எண்ணெயில் சில ரங்கங்களையும் உற்பத்தி செய்கிறது. இந்தியன் ஆயிலின் எரிபொருள் உலகத்தர சோதனைக்குட்பட்டு தயாரிக்கப்படுகிறது. 7517 கி.மீ. தூர இந்திய கடலோர கப்பல் பயணத்துக்கு இந்த எரிபொருள் ஏற்றதாகும்.