tamilnadu

img

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னை 
தமிழகத்தில் புதிய உச்சத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தொடக்கத்தில்  சென்னை மண்டலத்தை உருக்குலைத்தது. தற்போது அங்கு கொரோனா பரவல் வேகம் சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் ஜெட் வேக பாய்ச்சலில் பரவி வருகிறது. 

இந்நிலையில் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4,979 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,70,673 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (ஞாயிறு) ஒரே நாளில் 78 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4,059 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 1,17,915 ஆக உயர்ந்துள்ளது.    

;