தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஐ.எம்.பி.எஸ் எனும் உடனடி பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் அனைத்து கிளைகளிலும் ஐ.எம்.பி.எஸ் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவை இரண்டு வாரங்களில், யு.பி.ஐ. வசதியும் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் கூகுள் பே, பே டி.எம், பி.எச்.ஐ.எம் உள்ளிட்ட அனைத்து பணமற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.