செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மே 16 முதல் விண்ணப்பம் விநியோகம்
செங்கல்பட்டு, மே 12-செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மே 16ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.விஜயலட்சுமி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:-2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான, 5 ஆண்டு பி.ஏ. எல்.எல்.பி சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. பி.ஏ. எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எஸ்.சி. எஸ்.டி., வகுப்பினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 45 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250, தபால் மூலம் பெற ரூ.350. மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, தபால் மூலமாக பெறரூ.600 கட்டணம் செலுத்தவேண்டும். விண்ணப்பங்களை மே 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் மனுவை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழகத்தில் உள்ள 11 அரசு கல்லூரிகளில் எங்கு
வேண்டுமானாலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 3 வருட எல்.எல்.பிபட்டப்படிப்புக்கு ஜூன் மாதம் 28ஆம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
சுட்டெரிக்கும் கோடை வெயில்: மூதாட்டி பலி
ஊத்துக்கோட்டை, மே 12-தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைதாண்டி கொளுத்தி வருகிறது. இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வெயிலின் கொடுமையால் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி செங்கம்மாள் (70). சனிக்கிழமையனறு சுட்டெரிக்கும் வெயிலில்அல்லிகுழியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கசென்றார்.அப்போது வெயிலின் வெப்பத்தை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குசிகிச்சை பலனின்றி செங்கம்மாள் இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.