சென்னை, ஜூலை 24- ‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை’ என்ற குறளுக்கேற்ப, தளர்வு இல்லாத ஊக்கம் கொண்ட மாணவர்கள் எல்லாப் போட்டிகளிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் கூறி னார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் மாநிலம் முழுவதும் திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அண்மையில் சென்னை, அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடத்தி யது. இதில் மொத்தம் 777 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய ந.அருள், “தமிழக அரசு ஆறு தலைவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி விடுகிறது. இதில் அரசுப் பள்ளி மட்டும் அல்லாமல், தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வாய்ப்பை தற்போது அரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ் சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண் டும். முயற்சி உடைய மாண வர்களுக்கு பரிசு தேடி வரும் என்றார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சி யில் சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் முதல்வர் விமலா ஏஞ்சலினா வாழ்த் திப்பேசினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் உதவிப் போது மேலாளர் ரவி வரவேற்றுப்பேசினார்.