tamilnadu

img

கருத்தியல் வாழும் கவிஞர்கள்’ நிகழ்ச்சி

இலக்கியவீதி மற்றும் பாரதி வித்யா பவன் இணைந்து அண்மையில் சென்னையில் ‘ கருத்தியல் வாழும் கவிஞர்கள்’ நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கவிஞர் ச.விஜயலட்சுமிக்கு  ‘அன்னம்’ விருதை  இலக்கிய வீதி அமைப்பாளர் இனியவன் வழங்கினார். இந்நிகழ்வில் புதுவைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா.ரவிக்குமார், கவிஞர்கள் சதாரா மாலதி, எழுத்தாளர் பாரவி, துரை லட்சுமிபதி, ப.யாழினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.