tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களை அடையாளப்படுத்தி பணி நிரந்தரம்

ஒப்பந்த ஊழியர்களை அடையாளப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.13) மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத் தலைவர் வி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.தயாளன், மண்டலச் செயலாளர் ரவிக்குமார், கிளைச் செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.

;