tamilnadu

img

சென்னையில் குடியேற விரும்புகிறேன்

பிரிவு உபசார விழாவில் தஹில் ரமணி உருக்கம்

சென்னை,செப். 27- மும்பையில் இருப்பதை விட சென்னையிலேயே குடியேற விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதி பதி தஹில் ரமணி தெரி வித்துள்ளார். சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி யாக இருந்தவர் தஹில் ரமணி. அவரை தலைமை நீதிபதியாக நியமித்து ஒரு வருடம் ஆன நிலையில், சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நிய மிக்க கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, மேகா லயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இட மாற்றத்தை நீதிபதி தஹில் ரமணி ஏற்க மறுத்து, கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை யடுத்து, அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த  நிலையில், த`ஹில் ரமானி  இடமாற்றம் செய்யப் பட்டதை எதிர்த்து வழக்கு  தொடரப்பட்டது. இதனி டையே, தஹில் ரமணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப் பட்டதாக மத்திய அரசு அறி வித்தது. வழக்கும் தள்ளு படி செய்யப்பட்டது. இந்நிலையில், தஹில் ரமணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு  உபசார நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தஹில் ரமணி, ``பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்து பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி  என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்கு கிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கி யுள்ளேன். கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் 5040  வழக்குகள் முடித்து வைத் ததை நியாயமாகவேதான் கருதுகிறேன். அதற்கு உறு துணையாக இருந்த நீதி பதி துரைசாமிக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஒத்து ழைப்பு வழங்கிய நீதிபதி கள் மற்றும் வழக்கறிஞர்க ளுக்கு நன்றி” என்று உருக்  கத்துடன் பேசினார். இந்த  நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்தி ரன், தண்டபாணி, பாரதி தாசன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.