கடலூர் மாவட்டத்தில் கழிவு நீர்த் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பதிலளிக்கத் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு.
கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு டிஜிபிக்கும், தலைமைச் செயலாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கழிவு நீர்த் தொட்டிக்குள் மனிதர்களை இறங்கச் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.