tamilnadu

img

வேந்தராகப் பிரதமர் பதவி வகிப்பது எப்படி?

சென்னை,நவ.18- தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “ஆளுநர் பற்றி பேரவையில் பேசக்கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் ஆளுநரை விமர்சிக்கிறார்கள்” என கூறினார். 

அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு, “ஆளுநர்களின் செயல்பாட்டைத் தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளு நரை விமர்சிக்கவில்லை என்றார். மேலும் நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம்” என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. 

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், துணை வேந்தர்கள் நிய மனத்தில் முதலமைச்சரின் தலையீடு சரி யாக இருக்காது என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் க. பொன்முடி, “மேற்குவங்கத்தில் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர்தான் பதவி வகிக்கிறார். குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தர்களாக அம்மாநில முதலமைச்சரகள்தான் பதவி வகிக்கின்றனர்.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசுகள் தான் நியமிக்கின்றனர். வேந்தர்கள், துணைவேந்தர்கள் நிய மனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது என்று கூறி னார். 

இதையடுத்து திக்குமுக்காடிய பாஜக வினர் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்ப தால் முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து  வெளி நடப்பு செய்தனர்.