tamilnadu

காவல் நிலையங்களில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்?

மனித உரிமை ஆணையம் சம்மன்

சென்னை, மே 29 - சென்னை காவல் நிலையங்களில் உள்ள குளியலறை, கழப்பறைகளில் வழுக்கி விழுந்து காயமடைந்தவர்கள் குறித்து விளக்கம் அளிக்க பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றது? காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளதா? அதுமட்டுமல்லாமல் குளியலறைகள் முழுமையாக பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 

;