tamilnadu

img

கொரோனாவால் பலியான மருத்துவர்கள் எத்தனை பேர்: மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை:
இந்தியா முழுவதும் கொரோனா தொற் றால் 196 மருத்துவர்கள் இறந்துள்ள நிலையில், தமிழகத்தில் எத்தனை பேர் என அமைச்சர் அறிவிப்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களின் பணி மிகமிக முக்கியமானது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உயிரை பறிகொடுக் கும் துரதிருஷ்டவசமான நிலை உள்ளது. இந்தியா முழுவதும் 196 மருத்துவர்கள் உயிரிழந்ததாக ஐ.எம்.ஏ. தெரிவித்துள்ளது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் எத்தனை பேர் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்திருந் தார். இதை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், ஐஎம்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையை உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

;