tamilnadu

img

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை

காஞ்சிபுரம், ஜூலை 17- காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் கொரோனா தொற்றால்  200க்கும் மேற் பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 15, 16, 17, 18, 19 ஆகிய 5 வார்டு களில் உள்ள 21 தெருக்களிலும் கடந்த 12ந் தேதி முதல் வரும் 26ந் தேதி நள்ளிரவு வரை  நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும்  அடைக்கப்பட்டு  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை பெருநகராட்சி நிர்வாகம்  மூலம் வீடு வீடாக  சென்று வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நட மாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் வீடு வீடாக சென்று தொற்று பரி சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதனை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவ ணன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணை யர் மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர். இப்பணியில் 10க்கும் மேற்பட்ட நகராட்சி சுகாதார குழுக்கள்  ஈடு பட்டு வருகின்றன.