tamilnadu

img

ஆணவப்படுகொலைக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள், போராடுவோர் கவுரவிப்பு

“சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட இணையர்களுக்காக நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்காடும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கே.சி.காரல் மார்க்ஸ், டி.ஆர்.உதயகுமார், ஆர்.திருமூர்த்தி ஆகியோருக்கும் சாதி ஆணவப் படுகொலையால் இணையரை இழந்து நீதிக்காக போராடி வரும் அனுசுயா மற்றும் திலிப்குமார் ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் க.சுவாமிநாதன், பி.சுகந்தி, மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார் , மாநில பொருளாளர் இ.மோகனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.