சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியும், சென்னை பெருநகர காவல் துறையும் இணைந்து ஹெல்மெட் (தலைகவசம்) விழிப்புணர்வு முகாம் நடத்தியது. நிகழ்ச்சியில் மேற்கு சென்னை போக்குவரத்து துணை ஆணையர் லக்ஷ்மி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் வில்லிவாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் பாபு, எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.