tamilnadu

img

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 12 - தமிழ்நாட்டில், அடுத்த மூன்று தினங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வும், தென் தமிழக கடலோரப் பகுதி யில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரண மாகவும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட ங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும். குறிப் பாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

;