tamilnadu

img

தொடர் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

கடமலைக்குண்டு, நவ.8- தேனி மாவட்டம் கோம்பைத்தொழு அருகே  மேகமலை அருவி அமைந்  துள்ளது. இந்த அருவியின் மேல் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேங்கும் நீர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கோம்பைத்தொழு, பொன் னன்படுகை, குமணன்தொழு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு வழங்கப்ப டுகிறது. இதனால் சுற்று லாப் பயணிகள் அருவி யின் மேல் பகுதிக்குச் செல்ல  வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  தற்போது மேகமலை வனப்பகுதியில் பெய்து  வரும் சாரல் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள் ளது. இதனையடுத்து அருவியில் குளிக்க  சுற்றுலா பயணி கள் வருகை அதிகரித்து வரு கிறது. வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொள் ளாத காரணத்தால் சுற்று லாப் பயணிகளில் சிலர் அரு வியின் மேல் பகுதிக்குச் சென்று குளிக்கின்றனர்.  சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்த வதால் கிராமங்களுக்கு வழங்கப்படும் கூட்டுக்குடி நீர்  அசுத்தமடைகிறது. எனவே  வனத்துறையினர் ரோந்துப்  பணியை தீவிரப்படுத்தி அருவியின் மேல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லாமல் தடுக்க வேண்டு மென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.