வானொலி செய்தி வாசிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய “வானலைகளில் ஒரு வழிப்போக் கன்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிறன்று (டிச. 18) நடைபெற்றது. நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட பிரபல பாடகர் பி.சுசீலா பெற்றுக் கொண்டார். இதில் கலந்து கொண்டு மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகை யில், எழுதப்படும் வரலாறு தான் நிலைத்து நிற்கும். தமிழகத்தில் ஓவியத்தைப் பற்றிய முதல் குறிப்பு பரிபாடலில் வருகிறது. பரங்குன்றத்தின் கோவிலில் வரையப்பட்ட ஓவியம் அது. அந்த ஓவியம் நூறு ஆண்டில் அழிந்திருக்கும். ஆனால் அந்த ஓவியத்தை புலவன் ஒருவன் பாடலில் புனைந்தான். அந்தப் பாடல் ஈராயிரம் ஆண்டுகளாக அந்த ஓவியத்தைப் பற்றிய கதையை சொல்லிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு கலையாக இருந்தாலும் அது எழுத்திலே பதிவு செய்யப் படும் போது காலத்தை வெல்லும் வலிமை யைப் பெறுகிறது என்றார்.
தமிழின் முதல் வரவு
தமிழின் நாடக வரலாறு துவங்கி நாவல் வரலாறு வரை, பத்திரிக்கை வரலாறு துவங்கி பாட்டுகளின் வரலாறு வரை அனைத்தும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் மாற்றப்படாத ஒரு துறையாக, வானொலிகளின் குரல் வழி வரலாறு இது வரை எழுதப்படவில்லை. அந்த வகையில் தமிழின் முதல் வரவு இந்த நூல்தான் என்றார். மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தது 1923ஆம் ஆண்டு. அடுத்த மூன்றா வது ஆண்டில் இலங்கையில் வானொலி துவக்கப்பட்டு விட்டது. முதல் உலகப்போ ரின் போது ஜெர்மனியின் கப்பல் ஒன்று குண்டு வீச்சால் பாதிக்கப்பட, அந்த கப்பலில் இருந்த ஒரு சமிக்ஞை கருவியை பயன்படுத்தி அந்த வானொலியை உருவாக்கி இருக்கிறார்கள். போரின் வாசம் 100 ஆண்டுகளும் வீசும் துறையாக ஒரு வானொலியின் வழியாக ஒரு தமிழ் எப்படி அரங்கேறி வந்திருக்கிறது என்பதும், அந்த தமிழின் அழகுக்கு அடியும், சிதை வுற்ற ஒரு போர் செய்தி வரலாறு முழுவதும் படித்திருப்பது என்பதும் மிகவும் தற்செய லாக நடைபெற்றுள்ளது.
தேவாரத்தை சிறப்பாக பாடிய இஸ்லாமியர்
அப்துல் ஹமித் 6ஆம் வகுப்பு பயிலும் பள்ளிக்கூடத்தில் தேவாரம் பாடல் உள்ளிட்ட சமய வகுப்பு எடுக்கப்படுகிறது. இவர் இஸ்லாமியப் பின்னணியில் இருப்ப தால் இவருக்கு என தனியாக இஸ்லாமிய ஆசிரியரை நியமிக்க முடியாது என்பதால் அந்த சைவ சமய வகுப்பில் கலந்து கொள் கிறார். தேவாரம் பாடல்களை மற்ற சைவ சமயத்தை சார்ந்த மாணவர்கள் பாடுவதை விட மிகச் சிறப்பாக பாடிய முதல் மாணவ ராக அவர் திகழ்ந்தார். சைவ பிரச்சாரகராக இருந்த நாவலர் ஆறுமுகம் குறித்து நடை பெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றவர். மதத்தை மொழி கடந்து செல்லு கிற அழகான இடத்தை மிக அழகாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
மதத்தை விட வலிமையானது தமிழ்
தமிழ் மொழியின் மிகப்பெரிய பலமே மற்ற எல்லா மொழிகளும் மதங்களுக்கு உரிமை கொண்டாடும். ஆனால் தமிழைத் தான் அனைத்து மதங்களும் இது எனது மொழி என உரிமை கொண்டாடுகிறது. ஏனென் றால் இங்கே மதத்தை விட பெரிய வலிமை யான நிறுவனம் மொழி என்றும் அவர் கூறினார்.
வரலாற்றுச் சாட்சியாக...
அந்த தமிழ் மொழியின் மூலம், தனது குரல் வளத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் இதயத்தையும் கவர்ந்தவர் அப்துல் ஹமீத் என்றும் புகழா ரம் சூட்டினார். வானொலி என்பது இன்றைக்கு வெறும் பாட்டுப் பெட்டியாக மாறிவிட்டது. ஆனால் முன்பு வானொலி ஒரு நிகழ்த்துக் கலையின் குரல் வடிவ மாக திகழ்ந்தது என்பதன் வரலாற்றுச் சாட்சி யாக இந்நூல் உள்ளது என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.
தமிழை காத்தவர்கள்
. நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், பள்ளிக் கூடத்தில் பயிலும் போது வானொலி நிலை யத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற அப்துல் ஹமீதுக்கு செய்தி வாசிப்பாளரா கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது தமிழ் மொழிப் பற்றால், குரல் வளத்தால் அந்த பணியை சிறப்புறச் செய்தார். மிகத் தெளி வாக பேட்டி எடுக்கக் கூடியவர். நல்ல செய்தி களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவரை ஒரு அறிவிப்பாளர் என்று சுருக்கிவிட முடியாது. தமிழைக் காத்தது இயல் இசை நாடகம் மட்டுமல்ல. இவரை போன்ற பேச்சாளர்களும்தான். நவீன காலத் தில் வானொலியில் இது போன்றவர்களின் நல்ல தமிழ் உச்சரிப்பை கேட்க முடிய வில்லை. அதற்கு காரணம் வானொலி வணிகமயமாகி விட்டது. இன்னும் பலரி டையே வானொலி மீதான மரியாதை குறையவில்லை. இந்த நூலில் ஒரு இடத்தில் கூட நான் என்ற சொல் இல்லை. தன்னைப் பற்றி குறிப்பிடும் போது இவன் என்றுதான் குறிப்பிடுகிறார். அவருடைய பணிவு இதில் தெரிகிறது
வானொலியின் வலிமை
இன்று ஊடகங்கள் பெருகிவிட்டன. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமா னாலும் பேசலாம் என்றாகி விட்டது. அதன் வழியாக தொடர்புகள் நெருங்கினாலும், உறவுகள் நெருங்கவில்லை. ஆனால் அந்த உறவை வலுப்படுத்தியவர் அப்துல் ஹமீத் என்றார். இன்று செல்போன் வந்து விட்டா லும் கூட, ஒரு சுனாமி வந்து விட்டால், வானொலி பெட்டிதான் நமக்கு செய்தியை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
வழிப்போக்கர் அல்ல
வானொலியில் தமிழ் இருக்கும் வரை அப்துல் ஹமீத்தின் புகழ் நிலைத்திருக்கும். இந்த நூலில் தற்புகழ்ச்சி இல்லாமல் வானொலியின் பயணமாக, இலங்கையின் பயணமாக, தமிழின் பயணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் வழி போக்கர் அல்ல. பல வழிப்போக்கர்களுக்கு வழி காட்டியவர் என்றார். இதில் பாடகர் பி.சுசீலா, சக்தி மசாலா உரிமையாளர் சீனிவாசன், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் ஆகியோரும் பேசினர். இந்த நிகழ்ச்சியை ஜெ.எம்.ஆர். நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.