சென்னையில் 27 கிணறு குளங்களை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் என் கிணற்றை காணவில்லை எப்படியாவது கண்டுபிடித்து தந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது போன்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருப்பார்.
இந்த காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், நம்பக் முடியாததாக இருந்தது. ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவம் நிஜ வாழ்வில் சென்னையில் நடந்துள்ளது. சென்னை மாநகரின் கடற்கரை பகுதியான ஈஞ்சம்பாக்கத்தில் தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி ராவுத்தர்கேனி உள்ளிட்ட 27 நீர்நிலைகளை காணவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 27 கிணறு- குளங்கள் எங்கே என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காணாமல் போன கிணறு- குளங்கள் பற்றி சென்னை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.