tamilnadu

அரையாண்டு தேர்வு : புதிய அட்டவணை

சென்னை, டிச. 10- தமிழ்நாடு முழுவதும் திங்களன்று (டிச. 11) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 1.90  லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வுக் கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 13ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளது. அட்டவணைப்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு ஒரே தேதியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13ஆம் தேதி தமிழ், 14ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம், 15ஆம்  தேதி ஆங்கிலம், 18ஆம் தேதி கணக்கு, 20ஆம் தேதி அறிவியல், 21ஆம் தேதி உடற்கல்வி, 22ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு 13ஆம் தேதி மொழிப் பாடம், 14ஆம்  தேதி ஆங்கிலம், 15ஆம் தேதி கணினி அறிவியல் , உயிர் வேதியியல்,  அரசியல் அறிவியல், புள்ளியியல், 18ஆம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், 21ஆம்  தேதி வேதியியல், அக்கவுன்டன்சி, 22ஆம்  தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு நடைபெறுகிறது.