சென்னை:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதிகேட்டும் அக்டோபர் 5 அன்று திமுகமகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கிபேரணி செல்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும்,ஹத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும் கனிமொழி எம்.பி. தலைமையில் திங்கள்மாலை திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.