சென்னை, ஆக.5- சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஆசிரியர் நீரில் மூழ்கி ஒரே மூச்சில் 6 ரூபிக் கனசதுர (ரூபிக் கியூப்ஸ்) புதிருக்கு தீர்வு கண்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையில் வசித்து வரும் இளைஞர் இளை யராம் (25). பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக ரூபிக் கனசதுர விளையாட்டில் உலக அளவில் நான்கு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது இரண்டு ஆண்டு களாக பயிற்சி மேற்கொண்டு தனது ஐந்தாம் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோணி புரூப்ஸ் என்பவர் ஒரே மூச்சில் நீருக்குள் மூழ்கிய படி ஐந்து ரூபிக் கனசதுர புதி ருக்கு தீர்வு கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார். அந்த சாதனையை தற்போது இளைய ராம் குறைந்த நேரத்தில் முறியடித்தார். சுமார் 2 நிமிடம் 17 விநாடியில் ஒரே மூச்சில் ஆறு ரூபிக் கனசதுர புதிருக்கு தீர்வு கண்டு சாதனை படைத்தார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்று பெருமிதத்தோடு கூறினார்.