“சிறுக சிறுக சேர்த்துவைச்சு இப்பதான் ஒரு கல்லுவீடு கட்டி னேன். குடுத்தனம் வந்து சில மாதத்தி லேயே நிலத்தடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறேன். என்னன்னு பார்த்தா என் வீட்டுக்கு பக்கத்து லேயே திருட்டுத்தனமா ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீரை உறிஞ்சி விக்குறாங்க, இதபத்தி கம்பிளைண்டு கொடுத்தா, சம்மந்தப்பட்ட எல்லாத்துறையையும் கவனிச்சாச்சு ஏதாவது வேணும்னா நீயும் கேட்டு வாங்கிக்க இல்லண்ணா காணாப்போய்டுவே என்று மிரட்டு ராங்க சார்’’ என்றார் ஏவிஎம் நகரைச்சேர்ந்த ஒரு தொழிலாளி.
சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள்
சென்னை பெருநகர் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட மாதவரம் ஏவிஎம் நகர் விரிவாக்கத்தில் சமீபத்தில் தான் இந்த நகர் உருவாக்கப்பட்டது. வடசென்னையிலேயே இங்குள்ள நிலத்தடி நீர் தான் ஓரளவு மாசு ஏற்படாமல் நல்லமுறையில் இருப்ப தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு பல இடங்களில் தனியார் கண்டெயினர் யார்டுகள், லாரி சர்வீஸ் மையங்கள், மாந்தோப்புகள், தோட்டங்கள் அதிகஅளவில் உள்ளன. இதுபோன்ற பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது தண்ணீர் மாஃபியாக்களுக்கு சுலபமாக உள்ளது.இங்குள்ள தனியார் கண்டெய்னர், மற்றும் டேங்கர் லாரி பழுதுபார்க்கும் சர்வீஸ் மையத்தின் பின்புறம் யாருக்கும் தெரியாமல் சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் விடுதிகளுக்கு விற்பனை
லாரிகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு ஏதுவாக சர்வீஸ் மையத்தின் கடைசி பகுதியில் தகடுகளான வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் அதிநவீன மோட்டார்கள் மூலம் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி யில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை பயன்படுத்தி இதுபோன்று ஏராள மான இடங்களில் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் ஆளுங்கட்சியி னர் ஆதரவுடன், நிலத்தடி நீர் திருடி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது இதுகுறித்து, அரசிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இங்கு திருடப்படும் நிலத்தடி நீர், சென்னையில் உள்ள ஓட்டல்கள், தனியார் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவல கங்கள், அடுக்குமாடி குடியிருப்புக ளில் வசிப்பவர்கள் தேவைக்காக, விற்பனை செய்யப்படுகிறது. தேவை யின் அடிப்படையில் ஒரு லாரி நிலத்தடி நீர், 2,750 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் நடத்திய ஆய்வில், மற்ற மாவட்ட ங்களை காட்டிலும், வடசென்னை யொட்டியுள்ள மாத்தூர், மாதவரம், பால்பண்ணை, மஞ்சம்பாக்கம், மணலி, கொசப்பூர், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி, புழல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நிலத்தடி நீர் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது.ஆளுங்கட்சியினர் ஆதரவுடன் இது நடப்பதால், அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்க தயங்கிவரு கின்றனர். இந் நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.சென்னை குடிநீர் வாரியம் மூலமும், இதே போன்ற புகார், அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், நிலத்தடி நீர் திருட்டை கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு குழுக்கள் அமைக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவ மதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுத்திடுக
மாதவரம் ஏவிஎம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தலைவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்பு கொண்டபோது, எங்கள் நகரில் சிலர் நிலத்தடி நீரை உறிஞ்சி தெரிந்தும் தெரியாமலும் வணிகரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஆளும் கட்சி, ஆண்டகட்சி என்ற வேறுபாடு இல்லாமல் இந்த தண்ணீர் திருட்டு நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஏவிஎம் நகர் உருவாகி சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன. போதிய அளவு மழைப்பெய்யாத காலங்களில் வறட்சி ஏற்பட்டு இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது, எங்கள் நிர்வாகத்தால் நேரடியாக தலையிட்டு தடுக்க முடி யாத கையறு நிலையில் இருப்பதாக அவர் கூறினார். மேலும் குடி யிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி தண்ணீர் திருட்டை நிரந்தர மாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
த.பிரகாஷ்
ஏவிஎம் நகர் விரிவாக்கத்தில் சில சமூக விரோதிகளின் நிலத்தடிநீர் திருட்டால் பாதிக்கப்பட்ட டி.பிரகாஷ் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்புதான் நான் இங்கு குடித்தனம் வந்தேன். சில பத்து அடிகளிலேயே நிலத்தடிநீர் கிடைத்துவந்தது, மிகவும் சுவையான குடிநீர் என்று பூரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது சிலர் லாபவெறிக்காக கள்ளத்தனமாக நிலத்தடி நீரை எடுத்து விற்றுவருகின்றனர். எனது வீட்டின் அருகிலேயே ஆழ்துளை கிணறு கள் அமைக்கப்பட்டு லாரிகளில் எடுத்து விற்கப்படுகிறது. இதனை தட்டி க்கேட்க சிலர் அச்சப்படுகின்றனர். இது எங்கள் வாழ்வாதாரப்பிரச்சனை என்பதால் இனி தயக்கத்திற்கு இடம் இல்லை. அரசு மற்றும் பொதுப்பணித்துறை உடனே தலை யிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்கள் நகர் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம் என்றார். நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் அதீத சுரண்ட லுக்கு உட்படுத்தப்படும் அபாயத்தி லிருந்து பாதுகாப்பு வழிவகைகள் வழங்குதல் மற்றும் தமிழ்நாட்டில் அதன் திட்டமிடப்பட்ட மேம்பாடு, சரியான மேலாண்மை மற்றும் அது தொடர்பானவைகள் குறித்தவை களை உறுதி செய்தல் போன்றவை களை நோக்கமாகக் கொண்டு கடந்த 04.03.2003 அன்று, “தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம்” இயற்றப்பட்டது. நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்கவும் அதனைச் சிறப்பாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தவும் நீர் வளங்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது. நீர் தொடர்பாக நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டி அவசரமாகவும், அறிவியல்பூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். நம் தலைமுறைக்கும், நமது வாரிசு களுக்கும் பாதுகாப்பான நீரை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். மாநில அரசு விரைவாக, நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்திற்கான விதிகளை உருவாக்க வேண்டும். மேலும் இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்திடவும் வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.