tamilnadu

பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு இல்லை

சென்னை,பிப்.3- பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து  மொழி சிறுபான்மை விண்ணப்ப தாரருக்கு விலக்களிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து  மொழி சிறுபான்மை விண்ணப்ப தாரர்களுக்கு விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.

2023  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்க ளில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தான் முடி வெடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  தமிழ்நாடு அரசு கடந்த 2011 நவம்பர்  15-ல் ஒரு அரசாணையை வெளி யிட்டது.

இதன்படி அரசுப் பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,  சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும்  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களாக புதிதாக நியமிக்கப்படு பவர்கள் தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

2010 ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டு களுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தர விடப்பட்டது. இந்த அரசாணை சிறு பான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு களை விசாரித்த நீதிபதிகள் `ஹூலு வாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர் ஆசிரியர்களின் தகுதியை உயர்த்துவதற்காக இந்த அரசா ணையை தமிழ்நாடு அரசு பிறப்பித் துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வு களை நடத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய  கல்வி உரிமை சட்டம் சிறுபான்மை யினர் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிக் கூடங்களை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக இந்தப் பள்ளி களின் தன்மையை பாதிக்கும் விதமாக  உத்தரவு பிறப்பிக்க முடியாது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித் துள்ளது. மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.