தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதத்திற்கு 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து பள்ளிகள் தற்போது வரை திறக்கப்பட வில்லை. எப்போது திறக்கபடும் என்ற உறுதியாக தகவலும் இதுவரை வெளியாக வில்லை. இந்த சூழலில் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப்பொருட்களுடன் சேர்ந்து தற்போது செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.