சென்னை, ஆக. 4 - சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்கள் மற்றும் 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “பள்ளிக் குழந்தை கள் நன்கு படித்து மருத்துவர்களாக, ஆராய்ச்சியாளர்கள், அரசு அதி காரிகளாக, பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும் என்பதுதான் நமது முதலமைச்ச ரின் ஒரே லட்சியம். அதற்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி க்கு இந்த அரசு என்றைக்கும் துணை நிற்கும். கல்வி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சி விளையாட்டு முக்கியம். நன்றாக விளையாடும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கண்டிப்பாக இருக்கும், நல்ல ஆரோக்கியம் இருந்தால் நன்றாக படிப்பார்கள்” என்று அமைச்சர் கூறினார்.