சென்னை, டிச.23- தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு முழுவ தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் டிச.30, 31 மற்றும் ஜன 2 ஆகிய தேதிகளில் அனைத்து பேருந்து நிலையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த திட்ட மிட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் குறித்து அவர்கள் முறைப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு டிசம்பர் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொழிலாளர் தனி இணை ஆணை யர் விடுத்துள்ள அழைப்பு கடிதத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சங் கங்கள், நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கை களில் ஈடுபட வேண்டாம் என்றும் தொழி லாளர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.