tamilnadu

img

அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

செங்கல்பட்டு, மே 21- செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரங்கால் முடங்கிக் கிடந்த அரசு அலுவல கங்கள் கடந்த மே 18 முதல் செயல்பட தொடங்கியது.அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அப்பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் 20 நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு - சென்னை,  சென்னை - செங்கல்பட்டு என இருமார்க்கத்தி லும் அரசு ஊழியர்கள் பயணிக்க சொற்ப அளவிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பணிக்குச்  செல்லும் அரசு ஊழியர்கள் கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு தனிமனித இடைவெளி இன்றி செல்லும் நிலை  உள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகை யில், குறைவான பேருந்துகள் இயக்கப்படு கிறது. பேருந்துகளில்  இடம் கிடைக்காமல் நின்றபடி பயணம் செய்யும் நிலை உள்ளது.  இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளது. அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கிட  வேண்டும் என்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜான்லூயி சிடம் கேட்டபோது, கூடுதல் பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.