tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, அக். 30- துபாயில் இருந்து டி.வி.டி. பிளேயரில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த இளைஞரின் உடமைமகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது டி.வி.டி. பிளேயரில்  தங்க தகடுகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தையும், ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 525 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ. 40 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 910 கிராம் தங்கமும், ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோல்லி கூறியுள்ளார்.