சென்னை, ஜூன் 22- தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது நம்பிக்கை. மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பர். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 100 பேருக்கு ஆக்சி ஜனை தரும். இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிக்கிறது, நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம். தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுக விற்கு வந்தாலும் வரவேற்போம் என்றார்.