tamilnadu

img

ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் : 5  பேர்  கைது

சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 8 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வைந்த  சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சுங்கத்துறை அதிகாரி ஒருவரையும் கைது  செய்துள்ளனர். 
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர், 4 பேரை சோதனை செய்யாமல் வெளியே அனுப்ப முயற்சித்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அந்த 4 பேரையும் பிடித்து சோதனை செய்ததில், சுற்றுலா விசாவில் சென்று வந்த அவர்களிடம் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 23 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் 23 லட்ச ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு ட்ரோன் கேமராக்களும் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட பொருட்களை  பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்துள்ளனர்.