tamilnadu

img

தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டியது

தங்கத்தின் விலை இன்று  ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை  எட்டி உள்ளது. 
ஆபணத்தங்கம் விலை நேற்றுகாலை ரூ29,744க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் 29,832க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இதைத்தொடர்ந்து இன்று காலை தங்கம் விலை சவரனுக்க ரூ. 288 உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. புதிய விலை உயர்வின் அடிப்படையில் ரூ.30,120 ஆகும். கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,765க்கு விற்பனையாகிறது.  கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,640உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2.60 உயர்ந்து ரூ55.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இந்நிலையில் மேலும் தங்கம் விலை வரும் காலங்களில்  உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.