ஜி.ஓ-100 முத்தரப்பு ஒப்பந்த பாதிப்புகள், மின்வாரிய ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நிலை குறித்து விளக்கப் பிரச்சாரம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) சார்பாக தஞ்சை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் , மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் விஜயலெட்சுமி, மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், கௌரவ தவைலர் து.கோவிந்தராஜூ மற்றும் வட்ட நிர்வாகிகள் பேசினர். மாவட்டப் பொருளாளர் சங்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.