சென்னை, பிப். 2 - மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய வற்றை ரத்து செய்யக்கோரி மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் ஞாயிறன்று (பிப்.2) தொடங்கியது. விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்க துவக்க நிகழ்வில், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுக தலைவர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., க.தனசேகரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். ஆலந்தூர் தொகுதியில் நடை பெற்ற கையெழுத்து இயக்க துவக்க நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் பேசினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர். தாம்பரம், பல்லாவரம், சோழிங்க நல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர், மதுரவாயல் உள்ளிட்ட தொகுதி களிலும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் நடைபெற்ற கையழுத்து திமுக காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் துவக்கிவைத்தார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று பொது மக்களிடம் கையெழுத்து பெற்றார். மறைமலை நகரில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தலைமையிலும், கூடுவாஞ்சேரியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வழக்க றிஞர் சுந்தரமூர்த்தி தலைமையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிங்கப்பெருமாள் கோயிலில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஊனை ஆர்.பார்த்திபன் தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இரா. தமிழரசன் தலைமையிலும், சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலீம் கான் தலைமையிலும் நடை பெற்றது. திருக்கழுக்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வா.பிரமிளா தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இது தவிர மற்ற இடங்களிலும் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சார்பில் இயக்கம் நடைபெற்றது.
திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் துவக்கவைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பெருமாள், கே.ஜி.கணேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சி தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரியபாளையத்தில் நடைபெற்ற இயக்கத்தை திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கி.வேணு துவக்கிவைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.கங்காதரன், பி.அருள், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மூர்த்தி, சக்தி வேல், காங்கிரஸ் கட்சியின் வட்டத் தலை வர் வி.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் அறிவுச்செல்வன், திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.