புதுச்சேரி,செப்.15- பொதுத்தேர்வை கொண்டுவந்து மாணவர்களுக்கு மன அழுத்தம் தரக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி யுள்ளார்.a இதுகுறித்து முதல்வர் ஞாயி றன்று (செப். 15) செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: இந்திய நாட்டிற்கு ஒரே மொழி யாக இந்திதான் இருக்க வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தி யுள்ளார். இந்திய நாடு பல மதங்களை,மொழிகளை, கலாச்சாரங்களை கொண்ட நாடு. பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்று மையாக வாழ்ந்து வருகின்றனர். தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் தமிழும், கர்நாட காவில் கன்னடமும், கேரளாவில் மலையாளமும், தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கும் மாநில மொழிகளாக உள்ளன. வட மாநிலங்களில் இந்தி மொழி பேசப்பட்டாலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி என்று ஒன்று உள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த மொழி யில்தான்உரையாடல் செய்கின்ற னர். மேலும் படிப்பதும், எழுதுவ தும்கூட தாய்
மொழியில்தான். ஆங்கிலம் முதன்மையான மொழியாக உள்ள இந்த நேரத்தில் மத்திய அமைச்சரின் கருத்து இந்தியை கட்டாயமாக திணிப்பதாகஉள்ளது. ஆகவேதான் தமிழகம், புதுச்சேரியில் இதற்கு பெரிய எதிர்ப்புஉள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் கொள்கையை திணிக்கின்றனர். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, எம்மதமும் சம்மதம், அனைத்து மதத்தையும் வர வேற்கும், அனைத்து மொழிக ளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்.இணைப்பு மொழி ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விருப்பப்படும் மொழிஇருக்கலாம் என்பது நேருவின் கொள்கை. ஆனால் இந்தியை திணிப்ப தன்வெளிப்பாடுதான் உள்துறை அமைச்சரின் கருத்து என்றார். புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கையில் இந்தி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்றும் வலியுறுத்தி இருந்தனர். அதற்கு கடும் எதிர்ப்புகிளம்பிய துடன், பாராளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர்மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்திதான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தி மொழிக்கு எதிர்ப்பு அல்ல, இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். எனவே உள்துறை அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளத. இது மத்திய அரசின் கல்விக் கொள்கையில் உள்ளது. பொதுத்தேர்வை கொண்டுவந்து மாணவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது. ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை திறமையை பள்ளி அளவில் சோதிப்பதே ஏற்று கொள்ளக் கூடியது. பொதுத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கக் கூடாது.புதுச்சேரியில் எந்த நிலை என்று கல்வித்துறை அமைச்சருடன் கலந்துஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார்.