பெரம்பூரில் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம்
வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பெரம்பூரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு
திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அம்பத்தூர் 85, 86ஆவது வட்டங்களில் வாக்கு சேகரித்தார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.லெனின் சுந்தர், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் எச்.பீர்முகம்மது, மகேந்திரன், மதிமுக நிர்வாகிகள் டி.சி.ராஜேந்திரன், தாமோதரன், ஜெ.சிக்கந்தர், விசிக நிர்வாகிகள் தேவஞான முதல்வன், இப்ராஹிம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சசிகாந்த் செந்திலை ஆதரித்து எம்.எச்.ஜவாஹிருல்லா பிரச்சாரம்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து புழல் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். இதில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.தாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், சா.இளங்கோவன் (விசிக), டி.சி.ராஜேந்திரன் (மதிமுக), வீ.ஆனந்தன், வி.கமலநாதன் (சிபிஎம்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கேமரா மூலம் கண்காணிப்பு
சென்னை, ஏப்.12- சென்னையில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை காவல்துறையினருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர் களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்கார ணம் கொண்டும் வெளி யாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக் கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங் களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை காவல்துறை அதிகாரிகளு டன் கலந்து பேசி முன்கூட் டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடை பெற உள்ளது.
பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டி ருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பந்தல்களும் அமைக்கப்படு கின்றன.
திருவான்மியூரில் தேர்தல் விழிப்புணர்வு
சென்னை, ஏப்.12- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகு திகளுக்கு வரும் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்நிலை யில், தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசதியத்தை வலி யுறுத்தி திருவான்மியூர் கடற்கரையில் வெள்ளி யன்று காலை பாரா செய்லிங்செய்து (பறக்கும் பாரசூட்டை படகு இழுத்துச் செல்லு தல்) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதி காரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.இதில் ஏராளமான பாரா கிளைடிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.