திருவள்ளூர் மாவட்டம், அலமாதி கிராமத்தில் உள்ள வெண்மணி படிப்பகத்தில் திங்களன்று (நவ.18) விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் கோ.வீரய்யன் உருவ படத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.மணி திறந்துவைத்தார். மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர், மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், செயலாளர் அ.து.கோதண்டன், பொருளாளர் எம்.கர்ணன், துணை நிர்வாகிகள் இ.ராஜேந்திரன், இ.தவமணி, என்.கங்காதரன், பி.அருள், இ.ரவி, டி.சரளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.