மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் அம்பத்தூர் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி 3 லட்ச ரூபாயை பகுதிச் செயலாளர் ஆர்.கோபி வழங்க மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணதமிழன், மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர், நிர்வாகிகள் கே.சீனிவாசன், எம்.பகத்சிங், ரவி, கிருஷ்ணசாமி, கேசவன், குப்புசாமி, ஏசுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.