கோவையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நாளை மாலை முதல் திங்களன்று காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரேனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மதுரையைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவையில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் நாளை 24ம் தேதி மாலை 5 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை எவ்வித தளர்வும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.