tamilnadu

img

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கியது

சென்னை, ஏப்.1- தமிழகம், புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் திங்களன்று(ஏப்.1) தொடங்கின. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும் இன்று தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றன. மக்களவை தேர்தலையொட்டி இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1 முதல் 12 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

;