சென்னை,பிப்.26- நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக இந்த மையம் பிரத்யோக பயிற்சித்திட்டத்தை தயாரித்துள்ளதாக அந்த அகாடமி தெரிவித்துள்ளது. இதன் பயிற்சி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்கள் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக முடிக்க உதவும். சென்னை, கோவை மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுகளுக்கு 0422-2472222 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 87606 74444 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று என்று அந்த அகாடமியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.