சென்னை,ஜூலை 13- 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரி யர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்க ளில் உள்ள க்யூ.ஆர் கோடு (QR Code) மற்றும், இணையதளத் தைப் பயன்படுத்தி மாணவர்க ளுக்கு கற்பிக்க ஏதுவான வகை யில், மேல்நிலை வகுப்புகளின் ஆசிரியர்களுக்கு இலவச மடிக் கணினிகளை வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள் ளது. இதுதொடர்பாக அரசு வெளி யிட்ட அறிவிப்பில், மாவட்டத் தில் உள்ள மேல்நிலை வகுப்பறை களின் எண்ணிக்கையின் அடிப் படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்க ளுக்கு உடனடியாக இலவச மடிக் கணினிகளை வழங்க வேண்டும். இந்த மடிக்கணினிகளை கற்பித்தலுக்கு மட்டுமே பயன்ப டுத்த வேண்டும் எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள், 33 மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர்களுக்கும் இலவச மடிக் கணினிகளை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.