சென்னை, டிச.11- 2001-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் முதலமைச்சரால் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்படுகிறது.
இவ்விருதானது வெள்ளியில் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், ரூ.25 ஆயிரத்திற்கான பரிவுத் தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்திற்கான பரிவுத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்திற்கான பரிவுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.